டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி  உடல்நிலை கவலைக்கிடமாக  இருப்பதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

72வயதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை தேறாத நிலையில், மேலும் நலிவடைந்து வருகிறது. தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சீதாராம் யெச்சூரியின் உடல்நிலையை பல்துறை டாக்டர்கள் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என சிபிஐ மார்க்சிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கவலைக்கிடம்…