இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்) தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அவரது விருப்பப்படி, அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளது.

சீதாராம் யெச்சூரியின் உடலை தானம் செய்வது தொடர்பான ஆவணங்களில் அவரது மனைவி சீமா சிஷ்டி மற்றும் அவரது மகள் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரியின் அஸ்தி எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு முன், பொலிட்பீரோ உறுப்பினர்கள் சீதாராம் யெச்சூரிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரியாவிடை அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி செப்டம்பர் 12ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் சிபிஐ(எம்) தலைமை அலுவலகத்தில் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு அவருக்கு கட்சி தொண்டர்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.