டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக மேலும்  34,457 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளத. அதே வேளையில்  375 பேர் உயிரிழந்துள்ளதுடன், 36,347 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,   இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக 34,457 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,23,93,286 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 375 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்  மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,33,964ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,347 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.54% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும்   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,61,340 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.12% ஆக குறைந்துள்ளது. கடந்த 151 நாட்களுக்கு பிறகு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 57.61கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

[youtube-feed feed=1]