சென்னை: ‘கொரோனா’ இறப்பு சான்றுகளில் குளறுபடி நிலவுவதாகவும்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா என மருத்துவமனையில் சேர்க்கபடும் நிலையில், அவர்கள் உயிரிழந்தால், அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என சான்றிதழ் கொடுப்பதும், இறந்தவர்கள் இணை நோயினால் இறந்ததாக கூறப்படுவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, ஸ்ரீராஜலட்சுமி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் அரசு கொடுக்கும் இறப்பு சான்றிதழ் குளறுபடிகளால்,   மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தை, உயிரிழந்தவர்கள் பெறமுடியவில்லை , அதனால்,  கொரோனாவால் ஏற்படும் மரணத்தை இறப்புச் சான்றிதழில் குறிப்பிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சக வழக்குரைஞரான கண்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக இறப்புச் சான்று வழங்கப்பட்டுள்ளது. கரோனா மரணம் என இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படாததால், பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவி கிடைப்பது தடைப்படுவதாக கோரியிருந்தார்

இந்த வழக்கின் விசாரணைதலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் எழுந்துள்ளது. கொரோனா   இறப்பு பற்றி தெளிவான பதிவு இருந்தால்தான் தொற்றை சமாளிக்க, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  கொரோனா காலத்தில் இணைநோயால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர்கள்மூலம் ஆய்வுசெய்யவேண்டும் என்றும், இந்த ஆய்வு செய்தது குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை 28ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.