சென்னை: அவதூறு வழக்குகளில் ஏப்ரல் 16ம் தேதி ஆஜராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும், அவர்களது பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது 2 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் இந்த வழக்குகள் தொடரப்பட்டன. இந்த 2 வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த மாதம்  16ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.