சுல்தான்பூர்

வதூறு வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜரக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்காக கட அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்றம் அப்போது அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இன்று மீண்டும் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராகுல் காந்தி வரும் ஜூலை 2 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.