டெல்லி

சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை அவர் மனைவி பார்வையிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்ய்ப்ப்ட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். கெஜ்ரிவால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால். சிறையில் உள்ள மருத்த்வர்கள்களின் பரிந்துரைப்படி அவருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு உணவு கட்டுப்பாடும் பின்பற்றப்படுகிறது.

தனது மருத்துவ ஆவணங்களை தன் மனைவி சுனிதா பார்வையிட அனுமதி கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை சுனிதா பார்வையிட அனுமதி அளிது அந்த ஆவணங்களை சுனிதாவிடம் காண்பிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுனிதா வேறு டாக்டர்களிடம் சுதந்திரமாக ஆலோசிக்கலாம் என அனுமதி அளித்தார்.

ஆனால் சிறையில் டாக்டர்களுடனான ஆலோசனையின்போது தனக்கு துணையாக இருக்க சுனிதாவை அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.