Skip to content
  • Fri. Jul 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன்

Mar 12, 2021

வாஷிங்டன்: அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும் என அதிபர்  ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்க திகழ்ந்து வருகிறது.  உலக வல்லரசான அமெரிக்காவே, தொற்றின் பிடியில் சிக்கி சின்னாப்பின்னமானது. இதற்கு டிரம்பின் அலட்சியமான நிர்வாகமும் காரணமாக அமைந்தது. ஆனால், கடந்த ஜனவரியில் புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோபைடன், கொரோனா தொற்று பரவலை தடுக்க அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி, அனைவரும் முக்கவசம் அணிய வலியுறுத்தியதுடன், மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதனால், தற்போது அங்கு கொரோனா கட்டுக்குள் உள்ளது.

தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பைசர் மற்றும் மாடர்னா ஆகிய  2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அங்கு கொரோனா  கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது 3-வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன  தடுப்பூசி போடவும் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.  தனது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறார்.‌

அமெரிக்காவில்  திட்டமிட்டதைவிட தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருவதால் வருகிற மே மாதத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Post navigation

குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி! எங்கே தெரியுமா?
இன்று கேரளாவில் 1,780 பேர், டில்லியில் 431 பேருக்கு கொரோனா உறுதி

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer