புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel