சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ந்தேதி நீட்டிப்பு செய்து மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை, தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்த மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா 3வது அலை பரவும் வாய்ப்பு உள்ளதாக மத்தியஅரசும், சுகாதார நிபுணர்களும் எச்சரித்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலக்கட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தலைமை செயலாளர் இறையன்பு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel