கொரோனா வைரஸின் புதிய திரிபு தற்போது பரவலாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து புதிதாக அச்சப்பட ஏதுமில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கோவிட் பாதிப்பு உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 60 இன் பிரிவு (e) இன் விதிகளின்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் இதன் மூலம் கோவிட்-19 சந்தேக நபர் அல்லது பாதிக்கப்பட்ட நபர், தகுதிவாய்ந்த அதிகாரியால் சான்றளிக்கப்பட்டவர் இவ்வாறு வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளது.
குஜராத் (2), கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் என மொத்தம் நான்கு மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.