அலகாபாத்:  மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்”,  இது தொடர்ந்தால் தற்போது மெஜாரிட்டியாக உள்ள மக்கள் மைனாரிட்டி ஆக வேண்டிய நிலை உருவாகும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சமீப காலமாக நாட்டில் நடைபெற்று வரும் மதமாற்றங்கள் குறித்து தொடரப்பட்ட வருக்கில், மதமாற்ற நிகழ்வுகள் தடுத்த நிறுத்தப்பட வேண்டும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி  ரோகித் ரஞ்சன் அகர்வால் கூறி உள்ளார்.

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ராம்காலி பிரஜாபதி என்பவர் காவல்நிலையித்தில் தனது சகோதரரை சிலர் மதமாற்றம் செய்துள்ளனர். அவர் உள்பட எங்கள் கிராமத்தை சேர்ந்த பலரை  கைலாஷ் என்பவர் டில்லி அழைத்துச் சென்று கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி உள்ளார்  என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் உ.பி. மாநில அரசு, கைலாஷ் மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைலாஷ் கைது செய்யப்பட்டார்.  அவர்மீது ஆள்கடத்தல்  உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில்  கைலாஷ் ஜாமின் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதக்கூட்டங்களில் பங்கேற்கும் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுகின்றனர். இதற்காக கைலாஷ் பணம் வாங்கி வருகிறார் என்றார். இதற்கு கைலாஷ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  ரோகித் ரஞ்சன் அகர்வால் அதிரடி உத்தரவிட்டார்.

அவர் தனது உத்தரவில், அரசியல் அமைப்பின் 25வது சட்டப்பிரிவின்படி, ஒரு மதத்தை பின்பற்றவும், அதனை பரப்பவும் உரிமை உள்ளது. ஆனால், ஒரு மத நம்பிக்கையில் இருந்து மற்றொரு மத நம்பிக்கைக்கு மாற்ற உரிமை வழங்கப்படவில்லை. ‛

புரோபோகேசன்’ என்ற வார்த்தைக்கு ஊக்குவிக்கலாம் என அர்த்தம் கூறலாம். ஆனால், ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாற்றலாம் என அர்த்தம் இல்லை.

பலர் மதமாற்றத்திற்காக அழைத்து செல்லப்படுகின்றனர். இதனை தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள், சிறுபான்மையினராக மாறி விடுவர்.

மதமாற்றம் நடப்பதற்கு காரணமாக அமையும் மதக்கூட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதிரடியாக உத்தரவிட்டார்.