சென்னை; தொகுதி மறுவரையறை தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர் மற்றும் எம்.பிக்கள் குழு அழைப்பு விடுத்தது.
தொகுதி மறுவரையறை குறித்த தமிழ்நாடு அரசு கூட்டியுங்ளள தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ்-க்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வில்சன் எம்.பி அழைப்புவிடுத்தனர்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக எதிர்க் கட்சி, ஆளும் கட்சி முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட்டத்திற்கு வரும் 22 ஆம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 7 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அமைச்சர்கள், எம்.பி.க்கள் குழு அமைத்து, அவர்கள் மூலம் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மார்ச் 11ந்தேதி, செவ்வாய்க்கிழமை ஒடிசா மாநிலத்திற்கு சென்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயகை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில் அவர் அழைப்பை ஏற்றார். மேலும் அங்குள்ள மற்ற மாநில கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வில்சன் எம்.பி தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்அழைப்புவிடுத்தனர். மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ்-க்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்புவிடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு அழைப்பு விடுத்துள்ளது.