சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில்  விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்  கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு  டிசம்பர் 19ந்தேதி அன்று  மாலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன், முதல்வர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மட்டும், 1,03,812 பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில்  விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும் செல்வபெருந்தை அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’தளத்தில் வெளியிட்ட  பதிவில், தோ்தல் ஆணையத்தால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தமிழ்நாடு தோ்தல் வரைவு வாக்காளா் பட்டியலின்படி 97 லட்சம் வாக்காளா்கள் விடுபட்டிருப்பது மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. இந்த வரைவு வாக்காளா் பட்டியலை காங்கிரஸ் கட்சியை சோ்ந்த பூத் முகவா்கள் முறையாக சரிபாா்த்து, பாகத்தில் யாருடைய பெயா் விடுபட்டுள்ளது, எதனால் விடுபட்டுள்ளது என்பதை ஆராய்ந்து உடனடியாக அதன் காரணத்தை கண்டறிய வேண்டும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி 2026 (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவம் கொடுத்திருந்து அது நிராகரிக்கப்பட்டிருந்தால் அதன் காரணத்தை வாக்குச்சாவடி அலுவலரிடம் (பிஎல்ஒ) விசாரிக்க வேண்டும். மீண்டும் அந்த படிவம் கொடுத்து குறித்த காலத்துக்குள் இணைக்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 97.37 வாக்காளர்கள் நீக்கம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக்…

[youtube-feed feed=1]