டெல்லி

பாஜக தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், இந்தியாவிலும் பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறையை ராகுல் காந்தி ஊக்குவிப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது.

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியின் வாகனம் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டி பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா சாடியிருந்தார். காங்கிரஸ் கட்சி பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா,

‘தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் பாஜக மலிவான அரசியலில் ஈடுபடக்கூடாது. காங்கிரஸ் கட்சி வலதுசாரி பயங்கரவாதிகளிடம் மகாத்மா ஜியை இழந்தது. 2 பிரதமர்களை பயங்கரவாதிகளிடம் இழந்து விட்டோம். சத்தீஷ்காரில் பாஜக பயங்கரவாதிகளிடம் பறிகொடுத்து இருக்கிறோம்’

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, அவர்கள் குடும்பத்தினர் மற்றும் ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைமையை குறித்து மோடியும், ஒட்டுமொத்த பாஜகவும் பொய்களை பரப்பி காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மக்களை தூண்டி விடுகின்றனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு பாதுகாப்பு படையை பிரதமர்தான் மர்மமான முறையில் விலக்கிக்கொண்டுள்ளார்”

எனக் கூறியுள்ளார்.