திருச்சூர்

கேரள பேருந்தில் இருந்து கீழே விழ இருந்த பயணியை நடத்துனர் மின்னல் வேகத்தில் காப்பாற்றி உள்ளார்.

கேரளாவில் பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோவில், மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பஸ்சில் பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கும் பணியில் நடத்துனர் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அந்த பேருந்தில் ஏறிய வாலிபர் ஒருவர் உள்ளே செல்லாமல் படிக்கட்டுக்கு நேராக பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டு பயணச்சீட்டை வாங்கிக் கொள்கிறார். அந்நேரம் வேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்தில் இருந்து அந்த பயணி திடீரென கீழே விழப் பார்த்தார்.

மின்ன்ல் வேகத்தில் செயல்பட்டு லாவகமாக நடத்துனர் பயணியின் கையை பிடித்து மேலே இழுத்து அவரது உயிரை காப்பாற்றுகிறார்.  இந்த வீடியோ வெளியானதில் இருந்து அந்த நடத்துனருக்கு நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்

ஏற்கனவே கடந்த மாதம் திருச்சூரில் இருந்து கோழிக்கோடுக்கு பேருந்தில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டபோடுது துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர் பேருந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாய், சேய் என இரண்டு உயிர்களை காப்பாற்றினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதால் வீடியோவை பார்த்த பயனர்கள், துரிதமாக செயல்பட்ட அரசு பஸ் டிரைவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோ இதோ: