துரை

துரை நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு கஞ்சா வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

கடந்த மே மாதம் 4ம் தேதி பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை காவ;ல்துறையினர் கைது செய்தபோது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

பிறகு கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதால் \ ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றஹ்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று, சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில், ஜாமீன் வழங்க கோரிய வழக்கு மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மதுரை நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.