சென்னை; இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்டுத்தாருங்கள் என அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க  வேண்டும் என்றும்,  தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத்தை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்யதிடவும், கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.