சென்னை

நேற்று திமுக முன்னாள் அமைச்சர் க சுந்தரம் மரணம் அடைந்ததையொட்டி முதல்வர் மு க ஸ்டாலின் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

திமுக பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சராகவும், 1996 – 2001 பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார். கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘அண்ணா விருது’ வழங்கி கவுரவித்தார்.

நேற்று திமுக முன்னாள் அமைச்சர், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார.  தி.மு.க. நிர்வாகிகள்  முன்னள் அமைச்சர் சுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மீஞ்சூரில் மறைந்த முன்னாள் அமைச்சர் சுந்தரம் உடலுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சுந்தரம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.