சென்னை

இன்று சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்த முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தன் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு சென்று அங்கு மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும் திரு வி க நகர், பெரம்பூர், பாடி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகளை அவர் ஆய்வு செய்தார். முதல்வர் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது முதல்வர் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அதிகாரிகளை உத்தரவிட்டார்.  முதல்வரின் ஆய்வுப் பணியின் போது அமைச்சர்கள் சேகர்பாபு , துரைமுருகன், கே.என். நேரு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்படப் பலர் உடன் இருந்தனர்.