துபாய்:
புர்ஜ் கலிஃபாவில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல் இசைக்கப்பட்டது.
கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட சமயத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து கலைஞர் கருணாநிதி எழுதிய ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கை இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து கலைஞர் கருணாநிதி எழுதிய ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடல் துபாயின் புர்ஜ் கலிஃபாவில் இசைக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel