சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து புதிதாக உருவெடுத்துள்ள ஹீரோ Panja vaishnav tej.இவர் நடிக்கும் முதல் படத்தை Buchi Babu Sana இயக்குகிறார்.ஆக்ஷன் மற்றும் காதல் என இந்த படம் உருவாகி வருகிறது.மீனவர்கள் சமுதாயத்தில் நடப்பது போல் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு உப்பெண்ணா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிரஞ்சீவியும், விஜய் சேதுபதியும் கலந்துக் கொண்டனர்.

அதில் பேசிய சிரஞ்சீவி, விஜய் சேதுபதி சிறந்த மனிதர் எனவும், கதாபாத்திரங்களின் வலிமையையும், தன்மையும் உணர்ந்து நடிப்பவர் எனவும் பாராட்டினார். இதற்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.