இஸ்லாமாபாத்
சீனா பாகிஸ்தானுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கி உள்ளது

கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் க தத்தளித்து வருகிறது. பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பு முழுவதுமாக தீரும் நிலையில் உள்ளது.
எனவே பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, அந்த நாட்டுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 600 கோடி) கடனாக வழங்கியுள்ளது.
இந்த கடனை அடுத்த 2 நிதியாண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் கீழ் சீனா இந்த கடனை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலைத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் இந்த 2 ஆண்டுகளிலும் கடனுக்கான வட்டியைப் பாகிஸ்தான் செலுத்தும் எனக் கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel