சென்னை
சென்னையில் ஒரு இ பைக் தீ பிடித்து எரிந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.
சென்னை நகரில் உள்ள மதுரவாயல் அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்த கவுதம் அப்பகுதியில் மனைவி மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் வசித்து வந்தார்.
நேற்று தனது வீட்டில் நேற்று அவரது இ- பைக்கிற்கு சார்ஜ் போட்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவிதமாக பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் தம்பதி, குழந்தை உள்பட 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
எனவே 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குழந்தையின் தந்தை கவுதம் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.