‘டெல்லி: தெருநாய்கள் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தலைமைச்செயலாளர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது  என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம்,  எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தலைமைச்செயலாளர்கள தூங்குகிறார்கள் என கடுமையாக சாடியதுடன், அவர்கள் நேரில் ஆஜராகியே தீர வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டு உள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லி தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவது  தொடர்பான வழக்கில் கடந்த ஆக. 22 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.  பிறப்பித்தது, அதன்படி,  டெல்லி மற்றும் என்சிஆா் பகுதியில் அனைத்து நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என்றும், தெரு  நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி செலுத்திய பின்னா், பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் அவற்றை விடுவிக்க வேண்டும் எனக் கூறியது. பின்னர் இந்த வழக்கில், தெரு நாய்கள் தொடர்பான கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உத்தரவை பெரும்பாலான மாநிலங்கள் கண்டுகொள்ளவில்லை. டெல்லி,  மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்கள் மட்டுமே உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்தனர். இதனால், கோபமடைந்த நீதிபதிகள்,  பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத 25 மாநில தலைமைச்செயலாளர்கள்,  நவ. 3 ஆம் தேதி  விசாரணையின்போது, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  இந்த வழக்கில்,  மாநில/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  மனு தாக்கல் செய்தார். அந்தமனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  அதை ஏற்க மறுத்துவிட்டது.

நீதிமன்ற  உத்தரவை மதிக்காத,  “தலைமைச் செயலாளர்கள் நேரில் வரட்டும். பல ஆண்டுகளாக மாநில அரசுகளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளைச் சமாளிக்க நீதிமன்றம் இங்கு நேரத்தை வீணடிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று சாடியதுடன்,   நாடாளுமன்றம் விதிகளை உருவாக்குகிறது. ஆனால்  அதன்மீது எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்று கூறியதுடன்,  நாங்கள் மாநில அரசு  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் நாங்கள் கூறும்போது அவர்கள் அதை கண்டுகொள்ளாமல்,  அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரட்டும்; நாங்கள் அவர்களைக் கையாள்வோம். அவர்கள் நேரில் ஆஜராகி இணக்கப் பிரமாணப் பத்திரங்கள் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை விளக்க வேண்டும்.”  நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை.  அதனால், அவர்கள் நேரில் வரட்டும்  என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடி உள்ளது.