சென்னை: வைகோவின் போதைப்​பொருள் ஒழிப்​பு நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்  என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார். இந்த  நடைபயம் திமுகவுக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது சமத்துவ நடைபயணம் என மாற்றி உள்ளார்.

மதி​முக சார்​பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடை​பெறும் சமத்​துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்​ளார். இது தொடர்பான கொடியை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  ம தி​முக சார்​பில் போதைப்​பொருள் ஒழிப்​பு, சாதி மோதல் தடுப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி என்​னுடைய தலை​மையி​லான சமத்​துவ நடைபயணம், 2026 ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11 நாட்​களுக்கு நடை​பெறுகிறது. அதன்​படி 190 கி.மீ. வரை நடை​பெறும் நடைபயணத்​தை, திருச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக  இந்​துக்​கள் வழிபடும் கோயில், கிறிஸ்​தவர்​கள் வழிபடும் தேவால​யம், இஸ்​லாமியர்​கள் வழிபடும் மசூ​தி, சீக்​கியர்​கள் வழிபடும் குருத்​வா​ராக்​கள் அடங்​கிய சின்​னங்​கள் பொருந்​திய கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த  சிவப்​பு, மஞ்​சள் நிற கொடியை முதல்வர் எனக்கு வழங்க உள்ளார் என்றார்.

தொடர்ந்து பேசியவர், தனது நடைபயண நிகழ்ச்சி தொடக்க விழாவில்,   தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மநீம கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ளனர்.

தனது போதைப்​பொருள் ஒழிப்​பு மற்றும் சமத்துவ நடைபயணத்​துக்​காக மதி​முக தொண்​டரணி, இளைஞரணி, மாணவரணி​யில் இருந்து ஆயிரம் பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அதிகரித்துள்ள போதைபொருள் நடமாட்டம்: திமுக அரசுக்கு எதிராக வைகோ 10 நாள் நடைபயணம் அறிவிப்பு!