சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை  இன்று காலை சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.

சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை  முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இந்த முகாமில்,    இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் என அனைத்து வகையான மருத்துவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த முகாமானது  சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில்,  மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எ தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  மருத்துவ முகாம்களில் எடுக்கப்படும்  சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம்   சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும்  மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒரு மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒரு வட்டாரத்திற்கு ஒரு முகாம் என 388 வட்டாரங்களில் 1,164 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும்,   மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும்,   10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 120 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த முகாமில்,  முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு மற்றும் பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதுடன்,    ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, யுஎஸ்ஜி அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்படும். பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

`உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் எதிரான வழக்கு: அரசு திட்டத்தில் அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக்கூடாது! சென்னை உயர்நீதி மன்றம்