சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், ஓமியோபதி ஆணையரகம் சார்பில், புதிய கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கூடுதல் கட்டடங்களை திறந்தும் வைத்தார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பாகக் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்ததுடன் புதிய கட்டிங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதை திறந்துவைத்து, பயனர்களுக்கு வழங்கினார். அதன்படி, விருதுநகர், தி.மலை, தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் புதிய வீடுகள் திறக்கப்பட்டுள்ளன. ரூ.44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பழனி, திருப்பத்தூர், கூடலூர், சங்கராபுரம், மேலூர் அரசு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரூ.108.50 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், தென்காசி, திருப்பத்தூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் ரூ.42 கோடியில் கட்டப்பட்ட மருந்து கிடங்குகளும், மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் ரூ.1.49 கோடியில் கட்டப்பட்ட ஆய்வகக் கட்டமும் திறக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில் உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அலுவலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.
மேலும், மருத்துவம், ஓமியோபதி ஆணையரகம் சார்பில் ரூ.6.22 கோடியில் கட்டப்பட் கட்டடங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், புதிய கட்டடங்களுக்கும் று அடிக்கல் நாட்டினார்.