சென்னை: ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள  கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  10 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஆக.30 அன்று புறப்பட்டார். பின்னர் ஜெர்மனி சென்ற முதலமைச்சருக்கு டசெல்டோர்ப் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொழில்அதிபர்களை சந்தித்து முதலீடுகள் செய்ய வலியுறுத்தியதுடன், பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெத்திடப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களால் ஏற்பாடு செய்த நூற்றுக்கணக்கான அயலக தமிழர்கள் கலந்து கொண்டதமிழ் பண்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பேசினார். அப்போது அங்குள்ள தொழில்அதிபர்களை தமிழ்நாட்டில் தொழில்முதலீடு செய்ய அழைத்து வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து  நேற்று (செப்டம்பர் 1ந்தேதி) ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இது குறித்து அவர்  தனது எக்ஸ்  சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.

ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு. அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr.Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.

சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த ‘Cologne Library Visit’ அமைந்துள்ளது” என்பது குறிப்பிட்டுள்ர்.