சென்னை: தமிழ்நாட்டில் தொரில் வளத்தை பெருக்கும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக  தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,  முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை  18,500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் மேலும், இதன் மூலம் ரூ.10,882 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க உலக முதலீட்டாளர்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறிய அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா, சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான், மலேசியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சுற்றுப்பயணம் மூலம் ரூ.10,882 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் அமெரிக்கா சென்று, பெரிய தொழில் நிறுவனங்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்க்க இருப்பதாக கூறிய அமைச்சர் ரா4,  சென்னையில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில், 60% முதலீடுகள் பணிகளாக மாறியுள்ளன. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின என்றார்.