சென்னை : தமிழ்நாட்டில் மேலும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 11 புதிய ஆர்ட்ஸ் காலேஜ்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அதன்படி, உயர்கல்வித் துறை கட்டப்பட்டுள்ள 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். உயர்கல்வித் துறை சார்பில், கடலூர் மாவட்டம் – பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் – குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் – நத்தம், சென்னை மாவட்டம் – ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் – விக்கிரவாண்டியில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம் – செய்யூர், சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் – திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் – கொளக்காநத்தம், தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.