சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் 4 மாதங்களில் செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது

கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அன்று சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.  அதைத் தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ரம் மறுத்தது

அத்துடன் இந்த, வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும். உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக்கூடாது என்று தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு   உத்தரவிட்டுள்ளது.