சென்னை

ன்று சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாகச் சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது.  தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் உயிரியல் பூங்காக்களைத் திறப்பதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதையொட்டி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் முகக் கவசம் அணிவதுடன், 2 மீட்டர் தூரம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி பூங்கா உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன.