சென்னை: கடந்த ஓராண்டை கடந்தும் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று சென்னை அமைர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஓராண்டாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை,  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய,  வங்கி ஆவணங்களை  தங்களக்கு வழங்க உத்தரவிடக்கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில், கடந்த விசாரணையின்போது,  அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதில், வழக்கை 8ந்தேதிக்கு தள்ளி வைத்ததுடன், அன்றைய தினம்,  வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, இன்றைய விசாரணையின்போது செந்தில்பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வழங்க உள்ளது.