சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது குறித்து  உத்தரவு பிறப்பித்த்ள்ளது.

நாளை முதல் 3 நாட்கள் சிதம்பரம், நடராஜர் கோயிலில், நாளை முதல் மூன்று நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாததால், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.  இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.