சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் முஸ்லிம் பெண் விவாகரத்து வழக்கில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

உதகமண்டலத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் விவாகரத்து கோரி உதகமண்டல குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைக்கால ஜீவனாம்சம் வழங்க கோரி அப்பெண் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மாதம் 30 ஆயிரம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க கணவருக்கு உத்தரவிட்டது.  அந்த பெண்ணின் கணவர் இந்த உத்தரவை எதிர்த்து கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன், முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில்  விவாகரத்து வழக்கு முடியும்வரை ஜீவனாம்சம் வழங்குவதற்கு உரிய பிரிவுகள் இல்லை என்றாலும், அரசியலமைப்பு அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்ற ஊட்டி குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.