சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கவும், குப்பை அள்ளவும் பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொறுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பணி நேரத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு தங்கள் சொந்தவேலையாக சென்றுவிடுவதாக புகார் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த தானியங்கி வாகனங்கள், குப்பை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், குப்பை அள்ளும் வாகனங்கள் என அனைத்திலும் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதில் அறிவுறுத்தியுள்ளார்.

குப்பை சேகரிப்பு தவிர பல்வேறு பணிகளுக்காக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 2886 வாகனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.