ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரேணுகாசாமி உடலில் 39 இடங்களில் காயம் இருந்ததாகவும் மர்ம உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேணுகாசாமி

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஆட்டோ டிரைவரான ரேணுகாசாமி, இவர் நடிகர் தர்ஷனின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் கடந்த ஜூன் மாதம் 9 ம் தேதி பெங்களூரில் உள்ள மேம்பாலம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இவரது உடலில் காயங்கள் இருந்ததை அடுத்து இவரது மரணம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ரேணுகாசாமியை கூலிப்படையை ஏவி நடிகர் தர்ஷன் கொலை செய்ததை உறுதி செய்தனர்.

நடிகர் தர்ஷன்

இதுதொடர்பாக தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நடிகர் தர்ஷனின் காதலியும் நடிகையுமான பார்வதி கௌடா குறித்து சமூகவலைத்தளத்தில் ரேணுகாசாமி ஆபாசமாக சித்தரித்து அவரின் மனது புண்படும் வகையில் தகவல் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷன் கூலிப்படையினரை ஏவியுள்ளார், தர்ஷனும் அவரது ஆட்களும் ரேணுகாசாமியை பிடித்து அடித்ததோடு அவரது நெஞ்சு எலும்பை உடைத்துள்ளனர்.

ஜூன் 8 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது தர்ஷன் அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கிய நிலையில் கோபால்சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.