சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம்  அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அதாவது வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.