விஜயவாடா

.வரும் 12 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதிவி ஏற்க உள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் இருந்தது.

ஆந்திராவில்  மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. ஜனசேனா 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 11 இடங்களை மட்டும் பெற்று படுதோல்வியை சந்தித்தது. மற்றவர்கள் 8 இடங்களை பெற்றனர்.

சட்டஓஏரவௌ தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அதே வேளையில் ஆந்திர மாநில புதிய அரசு பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.   சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்தில் புதிய முதல்வராக வரும் 12 ஆன் தேதி பதவி ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான கோரண்ட்லா புச்சையா சவுத்ரி,

“டெல்லியில் நடைபெறும் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்கிறார். அதன்பிறகு வருகிற 11-ந்தேதி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அதில் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டு 12 ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும்.

இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும். நிகழ்ச்சி தலைநகர் அமராவதியில் நடைபெறும், இடம் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை”

என்று அவர் கூறினார்.