சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இரவு நேரங்களீல் சென்னையில், லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீட்டர் மழை பதிவானது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 6 செ.மீட்டர், சோழிங்கநல்லூரில் 5 செ.மீட்டர் மழை பதிவானது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதால் அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.