சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்,
”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 21ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின்படி, நாளை (மார்ச் 17) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும்.
வரும் 18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மார்ச் 16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் .
தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
என்று அறிவித்துள்ளது.