டெல்லி

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

தற்போது டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.  இதில் சென்னையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுளது. இதற்கு மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.

அமைச்ச்ர் நிதின் கட்கரி

”சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும்   ஏனெனில் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மூன்று முக்கிய சாலை பணிகள் தாமதமாகி வருகின்றன.

அந்த 3 முக்கிய சாலைப்பணிகள்

சென்னை ஈசிஆர்,

பெங்களுரு – சென்னை எக்ஸ்பிரஸ்வே

மற்றும் சென்னை திருவள்ளூர் சாலை

ஆகியவை ஆகும்.

இவை மூன்றும் இந்த வருடம் அதாவது 2024 இல் நிறைவடைவதாக இருந்தது.  ஆனால் ஒப்பந்ததாரர்கள் சரிவர பணி புரியாததால் அடுத்த ஆண்டு அதாவது 2025 இல் முடிவடையாலம் என எதிர்பார்க்கப்படுகிறது”

என்று பதில் அளித்துள்ளார்.