டெல்லி

மிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து நிராகரித்ததால் மத்திய அர்சு நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2020 ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட  நாடு தழுவிய அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. துவக்கப்பள்ளி முதல் பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை, 3 ஆண்டு பட்டப்படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், 2-ம் ஆண்டுடன் நிறுத்தினால் பட்டயம், 3 ஆண்டு முடித்தால் பட்டம் போன்றவை இடைநிற்றலை ஊக்குவிக்கும் என்பதால் எதிர்க்கப்படுகிறது.

தற்போது தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி பணத்தின் முதல் தவணை தொகை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழக அரசு ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 25% இடங்களுக்கான நிதியை சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்குகிறது. இந்த திட்டத்தை மத்திய  அரசின் 60% நிதி பங்களிப்புடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை நிராகரித்ததால் திட்டத்துக்கான் நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மத்திய அரசு. 2024-25 கல்வியாண்டில் SSA திட்டத்திற்கு 4 தவணைகளில் ரூ.2 ஆயிரத்து 152 கோடி வழங்க வேண்டும். முதல் தவணையான ரூ.573 கோடி ரூபாயை  ஜூன் மாதமே வழங்கியிருக்க வேண்டிய நிலையில், தமிழக அரசு சார்பில் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.

இவ்வாறு சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டிருப்பதால், வட்டார வள மைய பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேருக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், ஆசிரியர் பயிற்சி, மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி ஆகியவையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்காததால் சில மாதங்களாக தமிழக அரசின் நிதியில் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் கல்வித்துறைக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  புதிய கல்விக் கொள்கை அம்சங்களைத் தவிர்த்து பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு ஒப்புதல் அளித்து கடிதம் அனுப்பியும் அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.