
காரைக்குடி:
மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்று திமுக மாநிங்களவை எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.
காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு உள்ளது என்று குற்றம் சாட்டினார். தற்போதைய அரசு தமிழகத்தின் தீய சக்தியாக விளங்கி வருகிறது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் என்றும் எச்சரித்தார்.
அப்போது செய்தியாளர்களின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா என்ற கேள்விக்கு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்றும்கூறினார்.
Patrikai.com official YouTube Channel