“அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக போரை நிறுத்துங்கள்” என்று கூறியதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறினார்.
ரஷ்யா – உக்ரைன் போன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுதம் வைத்திருக்கும் அண்டை நாடுகள் என்ற போதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவது அணு ஆயுதப் போருக்கு வழி வகுத்திருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டு லட்சக்கணக்கான உயிர்ழப்பு தவிர்க்கப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவின் முன்னெடுப்பு இருப்பதாக அவர் பெருமையுடன் தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததே காரணம் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அதேவேளையில், தன்னைப் போல் வர்த்தகத்தை முன்னிறுத்தி எந்த இரு நாட்டிற்கும் இடையிலான போரை நிறுத்தியவர்கள் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.