டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்த அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை மேற்கொண்டார். இந்த புதிய நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CBSE உலகளாவிய பாடத்திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது; அதன் தொடர்ச்சியாக வருடத்திற்கு இரண்டு முறை தேர்வு நடத்துவதற்கான வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.எ தேர்வு அழுத்தத்தைக் குறைப்பதற்கான தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது. முதற்கட்டகமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் செமஸ்டர் முறையில் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வு விருப்பம் 2026-27 கல்வியாண்டில் இருந்து தொடங்கும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. CBSE உலகளாவிய பள்ளிகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த உயர்மட்டக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த தேவையான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பிரதான் விவாதித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்,“கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், DoSEL செயலாளர்; ER செயலாளர்; MEA; மற்றும் CBSE, NCERT, KVS மற்றும் NVS ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் உலகளாவிய பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதில், 2026-27 கல்வியாண்டில் தொடங்கி வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிமுகப்படுத்த உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன, மேலும் 2026-2027 முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான CBSE உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்கவும் CBSEக்கு உத்தர விடப்பட்டது,” என்று CBSE தனது Xதளபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை செமஸ்டர் முறையில் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026-27 கல்வியாண்டிலிருந்து வருடத்திற்கு இரண்டு முறை சிபிஎஸ்இ தேர்வு முறை அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து டெல்லியில் கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத கற்றல் சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய கவனம் செலுத்தும் ஒரு படியாகும் என்று தெரிவித்த அமைச்சர் பிரதான் , தேர்வு மேம்பாடு மற்றும் சீர்திருத்தத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக இது அமையும் என்று தெரிவித்தார். மேலும் இந்த விவாதங்களின் வரைவு திட்டம் விரைவில் சிபிஎஸ்இ-யால் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த சீர்திருத்தம் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய விதிகளை செயல்படுத்துவதில் மற்றொரு முக்கியமான படியாகும் எனவும் மாணவர்களிடையே தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைக்க இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.