டெல்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மிஷனரிகள் வெளிநாட்டு நன்கொடை வாங்குவதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் 40 என்ஜிஒ அலுவலகம், அவர்களுக்கு உதவிய அரசு அதிகாரிகள், புரோக்கர்களின் இடங்களில் சிபிஐ  அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள், மிஷனரிகள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்று, இந்தியாவில் முறை கேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து, தொண்டு நிறுவனங்களுக்கு மத்தியஅரசு பல்வேறு கிடுக்கிபிடி உத்தரவைகள போட்டுள்ளது. ‘வௌிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் – 2010’ன் கீழ், இந்த முறைகேடுகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதை வேறு முறையில் முறைகேடாக பெற்று வருகின்றன.

இதுபோன்ற நன்கொடைகளை பெற மத்திய, மாநில அரசின் அதிகாரிகளும் தொண்டு நிறுவனங்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக,  சந்தேகத்துக்குரிய அதிகாரிகளின் செயல்பாடுகள், இடைத்தரகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளை நாடு முழுவதும் சிபிஐ கண்காணித்து வந்தது.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். டெல்லி, சென்னை,  கோவை, ஐதராபாத், மைசூர் உட்பட பல்வேறு நகரங்களில் சோதனை நடைபெற்றது.  இதில், முறைகேடுகளுக்கு துணை போன மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், இடைத்தரகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் 6 பேர் சிக்கியுள்ளனர். மேலும், ஹவாலா மோசடியில் தொடர்புள்ள ரூ.2 கோடியும் சிக்கியது. சோதனை தொடர்ந்து நடக்கிறது. இதில், மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]