கேனக்கல்

கேனக்கல்லில் காவிரி நீர் வரத்து 30000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்தது. தற்போது கர்நாடகா, கேரளா மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

எனவே கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து மீண்டும் காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 9ம் தேதி மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அடுத்த நாள் காலை 19,000 கன அடியாகவும், மாலை விநாடிக்கு 22,000 கன அடியாகவும் அதிகரித்தது.