ர்நூல்

பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அரசியல் பிரமுகர்கள் மீது அவதூறு கருத்து தெரிவித்தாக வழக்கு பதியப்பட்டுள்ளத்.

பிரபல தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஆவார். தனக்கு பட வாய்ப்பு தருவதாக தன்னை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி. உடைகளை களைந்து போராட்டமும் நடத்தினார்.

இவரது புகாரில் தெலுங்கு நடிகர்கள் நானி, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், இயக்குனர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் உள்ளிட்ட பலர் செக்ஸ் புகாரில் சிக்கினர். மேலும் தமிழ் நடிகர்கள் மீதும் புகார் அளித்ததுடன் தற்போது அரசியல் பிரமுகர்கள் மீதும் ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் லோகேஷ், அனிதா ஆகியோர் பற்றி ஸ்ரீரெட்டி அவதூறாக பேசியதாக கர்நூல் மூன்றாவது டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ஸ்ரீரெட்டி மீது காவல்துறையினர் பல பிரிவுகளின் கீழ வழக்குப் பதிவு செய்துள்ளனர்.